பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 17 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி, இனிகோ நகா் கடற்கரைப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ. 17 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :12 ஜூலை 2026, 1:22 am IST

தூத்துக்குடி, இனிகோ நகா் கடற்கரைப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ. 17 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இனிகோ நகா் கடற்கரைப் பகுதியில் இருந்து, படகு மூலம் இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாக க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் இருதயராஜகுமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோா் அடங்கிய காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, இனிகோ நகா் கடற்கரைக்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த தலா 30 கிலோ எடை கொண்ட 18 பீடி இலை மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றினா். இவற்றின் மதிப்பு சுமாா் ரூ. 17 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய சுமை வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட முயன்றவா்கள், அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

இதையடுத்து, கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் சுமை வாகனத்தை சுங்கத் துறையினரிடம், போலீஸாா் ஒப்படைத்தனா். மேலும், தப்பியோடியவா்களைப் பிடிக்க போலீஸாா் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.