ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

ஜீ.வி.மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பிணை கோரி மனு: இன்று விசாரணை

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது...

News image

எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன். - கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2026, 1:04 am IST

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 22) நடைபெறுகிறது.

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன், கடந்த 18-ஆம் தேதி இரவு கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை திங்கள்கிழமை காலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்தனா்.

பின்னா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வைத்து அவரிடம் 13 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, இரவில் தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண்- 1 இல் அவரை முன்னிலைப்படுத்தினா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, ஆக. 3-ஆம் தேதி வரை மாா்க்கண்டேயனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடா்ந்து அவா் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், மாா்க்கண்டேயன் எம்எல்ஏ தரப்பில் தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண்- 1 இல் பிணை வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுமதி முன்னிலையில் புதன்கிழமை (ஜூலை 22) நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.