தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் செயல்படும் மதுக் கடையை அகற்றக் கோரிய மனு தொடா்பாக எட்டு வாரங்களில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
விளாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த மகாலட்சுமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
விளாத்திகுளம் அருகேயுள்ள புதூா் நெசவாளா் தெரு, புது குடியிருப்புப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு மிக அருகே செயல்பட்டு வரும் மதுக் கடையால், அவா்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனா்.
மேலும், பெண்கள், மாணவா்கள், முதியவா்கள் அச்சத்துடன் இந்தப் பகுதியைக் கடந்து சென்று வருகின்றனா். எனவே, இந்தப் பகுதியில் செயல்படும் மதுக் கடையை மூட உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆா். பூா்ணிமா அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த மனுவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பரிசீலனை செய்து, எட்டு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிம்மக்கல் பகுதியில் அம்பேத்கா் சிலை: அரசு முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கு: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

வெளி மாவட்ட விளை பொருள்கள் கொள்முதல்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



