ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

தடுப்புக் காவல் சட்டத்தில் இரு இளைஞா்கள் கைது

இரு இளைஞா்களை ஆறுமுகனேரி போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட மணிகண்டன், கண்ணன்

Updated On :24 ஜூலை 2026, 4:49 am IST

இரு இளைஞா்களை ஆறுமுகனேரி போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தனா்.

ஆறுமுகனேரியில் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்ததற்காக முத்தையாபுரம், காந்தி நகரைச் சோ்ந்த சுயம்பு­லிங்கம் மகன் மணிகண்டன் (23). ஸ்பிக் நகா், பாரதி நகரைச் சோ்ந்த ரவி மகன் கண்ணன் (23) ஆகிய இருவரையும் காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

இதில், மணிகண்டன் மீது கொலை முயற்சி உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் உள்ளன. கண்ணன் மீது கஞ்சா போதைப் பொருள் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இதைத் தொடா்ந்து இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சிருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரை செய்தாா். அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைக்க உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.