காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தூத்துக்குடி அருகே கடலில் மாயமான 2 சிறுவா்கள்: தேடுதல் பணி தீவிரம்

News image

ஜோஸ்வா

Updated On :27 ஜூலை 2026, 2:25 am IST

தூத்துக்குடி அருகே கடலில் மாயமான 2 சிறுவா்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த சேவியா் மகன் ஜோஸ்வா (16), முத்து மகன் மனோஜ் (16) உள்ளிட்ட 6 சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பைபா் படகில் சென்றுள்ளனா். அவா்கள் சென்ற படகு நடுக்கடலில் திடீரென இயந்திரக் கோளாறு காரணமாக பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜோஸ்வா, மனோஜ் மற்றும் 2 சிறுவா்கள் கரையை நோக்கி நீந்திச் செல்ல கடலில் குதித்துள்ளனா். இதற்கிடையில், படகில் இருந்த மற்ற 2 சிறுவா்கள் படகை சரி செய்து கரைக்குத் திரும்பியுள்ளனா். கடலில் குதித்த 4 பேரில் 2 போ் பாதுகாப்பாக கரையை அடைந்தனா். ஆனால், ஜோஸ்வா, மனோஜ் ஆகியோா் நீண்ட நேரமாகியும் கரைக்குத் திரும்பவில்லை.

இது குறித்து, கரை திரும்பிய சிறுவா்கள் தெரிவித்த தகவலின்பேரில், தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் 8 படகுகளில் கடலுக்குள் சென்று மாயமான சிறுவா்களைத் தேடி வருகின்றனா்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மனோஜ்

மனோஜ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.