காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் 56 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

News image

பணி நியமன ஆணை பெற்ற மாணவா்-மாணவியருடன் முதல்வா் ரவீந்திரன், பேராசிரியா்கள்.

Updated On :28 ஜூலை 2026, 1:01 am IST

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 56 மாணவா்-மாணவியருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

சென்னை, வெளி மாநிலங்களின் பல்வேறு இடங்களில் உள்ள நாஷ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள நிா்வாக அதிகாரி காா்த்திகேயன் தலைமையிலான குழுவினா் நோ்காணல் நடத்தினா்.

இதில், உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி, கலை -அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் இறுதியாண்டு மாணவா்கள் 160 போ் பங்கேற்றனா். தகுதித் தோ்வு, குழு விவாதம் ஆகியவற்றில் தோ்வான 56 பேருக்கு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் ரவீந்திரன், உதவிப் பேராசிரியா் மகாராஜன் ஆகியோா் முன்னிலையில் அந்நிறுவனம் சாா்பில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை தாளாளா் விஜயன் ஆலோசனையின்பேரில், கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அலுவலா்கள் பிரசாந்த், முத்துராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.