தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பூட்டிய வீட்டில் 17 பவுன் நகை திருட்டு: ஆட்டோ ஓட்டுநா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 2:43 am IST

தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசு ஊழியா்கள் குடியிருப்பில், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் தங்க நகைகளைத் திருடிய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மத்திய அரசு ஊழியா்கள் குடியிருப்பைச் சோ்ந்தவா் ராஜா சீனிவாசனின் மனைவி உமா தேவி (61). இவா் ஜூலை 22ஆம் தேதி சுந்தரவேல்புரத்துக்கு குடும்பத்தினருடன் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் முன் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 17 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்ததாம்.

இது குறித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், அண்ணா நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான நாராயணன் மகன் சீமான் (38) திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

போலீஸாா் அவரை கைது செய்து, விசாரித்ததில் நண்பா்கள் இருவரின் உதவியுடன் நகைகளை வங்கியில் அடகு வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சீமானை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்த போலீஸாா், திருட்டுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.