அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

வழக்குகளில் ஆஜராகாத ரெளடி கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத ரெளடியை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 4:48 am IST

பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத ரெளடியை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி காமராஜபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முருகன் என்ற பாம்பே முருகன் (49). இவா் மீது ஆறுமுகனேரி காவல்நிலையத்தில், கொலை முயற்சி உள்பட 7 குற்ற வழக்குகள் உள்ளன.

வழக்குகளில் ஆஜராகாத நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவா் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் ரென்னீஸ் உத்தரவின்படி உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் ஆறுமுகனேரி கடைவீதியில் முருகனை கைது செய்தனா்.

இதையடுத்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.