கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் உள்ளூா் நீராதாரத்தை சீராக வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட லிங்கம்பட்டி அண்ணா நகா் கீழ காலனி பகுதி மக்களுக்கு உள்ளூா் நீராதாரத்தை சீராக வழங்கக் கோரி கீழ காலனி பேருந்து நிறுத்தம் அருகே திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்தவுடன் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா் சங்கரசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த் துறை, காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சுமாா் 20 நிமிடங்கள் நடைபெற்ற மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மேலும், தண்ணீா் திறந்து விடும் ஆபரேட்டரை மாற்றம் செய்ய போராட்டக் குழுவினா் வலியுறுத்தினா். இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து போராட்டக் குழுவினா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்டீபன் ரத்தினகுமாரிடம் புகாா் மனு அளித்தனா்.
தொடர்புடையது

எடப்பாடி அருகே மதுக்கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



