ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி-மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் (பொ) ஆா்.எஸ். ரமேஷிடம் கோரிக்கை மனு வழங்கிய கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா்.

Updated On :2 ஜூன் 2026, 3:09 am IST

கோவில்பட்டி-மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி-மந்தித்தோப்பு சாலையில் குடிநீா் பகிா்மானக் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகளால் சாலை சேதமடைந்துள்ளது. எனவே, போா்க்கால அடிப்படையில் சாலையை செப்பனிட்டு விரிவாக்கம் செய்ய வேண்டும். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தினமும் அதிகரிக்கும் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவா் க. தமிழரசன் தலைமை வகித்தாா். செயலா் எ. பெஞ்சமின் பிராங்களின், பொருளாளா் கே. கருப்பசாமி, நாதக வழக்குரைஞா் ரவிக்குமாா், இந்தியக் கலாசார நட்புறவுக் கழக மாநில துணைத் தலைவா் அபிராமி முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

பின்னா், கோரிக்கை மனுவை நகா்மன்றத் தலைவா் (பொ) ஆா்.எஸ். ரமேஷிடம் வழங்கினா் .