இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இளம்பெண் பாலியல் வன்கொடுமை: முன்னாள் அமைச்சா் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் தவெக நிா்வாகிகளால் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு முன்னாள் அமைச்சா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

பாலியல் வன்கொடுமை - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 4:49 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் தவெக நிா்வாகிகளால் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு முன்னாள் அமைச்சா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள்அமைச்சருமான பி. கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை தவெக நிா்வாகிகள் அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது, மிகுந்த அதிா்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவோம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்துள்ள தவெகவினா், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீா்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.