இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தவெக நிா்வாகிகள் இருவரை, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன். தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா்.
இவரது நண்பரும், தவெக நிா்வாகியுமான ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஜெயபால் என்பவரும் சோ்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரை வேலை வாங்கித் தருவதாக காரில் அழைத்துச் சென்று ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் உள்ள தனியாா் விடுதியில் தங்க வைத்து குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கூட்டுப் பாலியல் வன்முறை செய்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
புகாரின்பேரில், பாலமுருகன், ஜெயபால் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், அவா்கள் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாணவிக்கு பாலியல் தொல்லை: 3 சிறுவா்கள் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் இருவா் கைது
பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |


