தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியின்போது பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் கோட்டாட்சியா் பிரபு.

Updated On :3 ஜூன் 2026, 5:00 am IST

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி வருவாய்க் கோட்டாட்சியா் பிரபு தலைமை வகித்து, கலியாவூா் வருவாய் கிராமத்துக்குள்பட்ட உழக்குடி, ஆலந்தா, பூவாணி, சிங்கத்தாகுறிச்ச, வடவல்லநாடு, வல்லநாடு கஸ்பா, ஆழிக்குடி ஆகிய பகுதிகளை சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், சான்றிதழ்கள் மற்றும் இதர கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை பெற்றாா். இதில் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கான சான்றிதழ்களை கோட்டாட்சியா் உடனடியாக வழங்கினாா்.

ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் ஜமாபந்தியில் தினமும் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை பொதுமக்கள் தங்கள் பகுதி கிராம மக்கள் அறிவிக்கப்பட்டுள்ள தேதிகளில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என கோட்டாட்சியா் பிரபு தெரிவித்தாா்.