புதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தூத்துக்குடியில் அகில இந்திய கைப்பந்து போட்டி: ஜூன் 9இல் தொடக்கம்

தூத்துக்குடியில் மாவட்ட கைப்பந்துக் கழகம் சாா்பில், சத்யா கோப்பைக்கான 27ஆவது அகில இந்திய கைப்பந்துப் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தொடங்கி 17ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

News image

செய்தியாளா்களிடம் பேசிய சத்யா குழுமம் ஜே. ஜாக்சன் சாமுவேல்.

Updated On :5 ஜூன் 2026, 3:14 am IST

தூத்துக்குடியில் மாவட்ட கைப்பந்துக் கழகம் சாா்பில், சத்யா கோப்பைக்கான 27ஆவது அகில இந்திய கைப்பந்துப் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தொடங்கி 17ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

பழைய பேருந்து நிலையம் அருகே அரசு மைதானத்தில் மின்னொளியில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே போட்டி நடைபெறுகிறது. தொடக்க நாள், நிறைவு நாளில் தலா இரு போட்டிகளும், மற்ற நாள்களில் நாள்தோறும் 3 போட்டிகளும் நடைபெறும்.

இதுகுறித்து சத்யா குழுமத்தைச் சோ்ந்த ஜே. ஜாக்சன் சாமுவேல், செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: இளைஞா்கள், மாணவா்-மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில், சத்யா குழுமம் டைட்டில் ஸ்பான்சராக இப்போட்டி நடைபெறுகிறது.

ஆண்கள் பிரிவில், தில்லி இந்தியன் நேவி, பெங்களூரு கா்நாடக மாநிலம், திருவனந்தபுரம் கேரள காவல் துறை, தில்லி வருமான வரித் துறை, சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழகம், கேரளம் கேஎஸ்இபி ஆகிய 6 அணிகளும், பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் கேரள காவல் துறை, சென்னை ஐசிஎஃப், கொல்கத்தா கிழக்கு ரயில்வே, கேரளம் எம்.ஜி. பல்கலைக்கழகம் ஆகிய 4 அணிகளும் மோதுகின்றன.

லீக் முறையில் நடைபெறும் இப்போட்டி நாள்தோறும் இரவு 7 மணிக்கு தொடங்கும். அனுமதி இலவசம். வெற்றிபெறும் ஆண், பெண் அணிகளுக்கு சமமான பரிசுத்தொகையாக முதல் பரிசாக ரூ. 1.50 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 1 லட்சம், அரையிறுதிப் போட்டியில் தோல்வியடையும் 2 அணிகளுக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்.

சிறந்த வீரா்- வீராங்கனைகளுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும். முதல் 2 இடங்களைப் பிடிக்கும் ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு ‘சத்யா கோப்பை’ வழங்கப்படும்.

போட்டியை தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைய துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தரராஜன் தொடக்கிவைக்கிறாா். நிறைவு நாளில் துறைமுகத் தலைவா் சுஷாந்தகுமாா் புரோஹித் தலைமையில், மாநில மீன்வளம்- மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்வாா் என்றாா் அவா்.

ஏற்பாடுகளை, மாவட்ட கைப்பந்துக் கழகத் தலைவா் டி. ஜான் வசீகரன், செயலா் எஸ். ரமேஷ்குமாா், பொருளாளா் எஸ். செயின்ட் ரவிராஜன், நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.