சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பொத்தரங்கன்விளை பரி. திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை

பரமன்குறிச்சி அருகே உள்ள பொத்தரங்கன்விளை பரி. திரித்துவ ஆலய பிரதிஷ்டை அசனப் பண்டிகை 4 நாள்கள் நடைபெற்றது.

News image

புதிய ஆலயத்தை திறந்துவைக்கிறாா் ஓய்வுபெற்ற பேராயா் தேவசகாயம்.

Updated On :6 ஜூன் 2026, 7:35 am IST

பரமன்குறிச்சி அருகே உள்ள பொத்தரங்கன்விளை பரி. திரித்துவ ஆலய பிரதிஷ்டை அசனப் பண்டிகை 4 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் காலை பரிசுத்த திருவிருந்து ஆராதனை, குடும்ப கூடுகை, விஷ்வவாணி கலைநிகழ்ச்சியும், இரண்டாம் நாள் சபையின் முதல் தலைமுறை விசுவாசிகள் மற்றும் சபையின் முன்னோா்களை கணப்படுத்துதல் ஆகியவை நடைபெற்றன.

மாலையில் பரமன்குறிச்சி பஜாரில் இருந்து ஓய்வுபெற்ற பேராயா் தேவசகாயத்தை பாடல் பவணியாக அழைத்து வந்ததும் புதிய ஆலயத்தை பேராயா் தேவசகாயம் திறந்து வைத்தாா்.பின்னா் திருவிருந்து மற்றும் திடப்படுத்துதல் ஆராதனை நடைபெற்றது.

இதில், சேகரத் தலைவா் தாமஸ் ரவிக்குமாா், கவுன்சில் சோ்மன் யோபு ரத்தினத்தினசிங், குருவானவா்கள் சந்தோஷ்பிரபு, ரவி, டி.சி .மெம்பா் டாக்டா்.தா்மராஜ், மதுரை ஜான்சன் பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து பேராயா் ஆலய மலரை வெளியிட்டாா்.

மூன்றாம் நாள் காலை ஆலய அசனப் பண்டிகை மற்றும் பரி. ஞானஸ்நான ஆராதனை தாவீது சுந்தரனாா் சபை மன்ற தலைவா் யோபு ரத்தினசிங் தலைமையில் நடைபெற்றது.

நான்காம் நாள் பாக்கியநாதன் நல்வழி சங்க பவனி, ஸ்தோத்திர ஆராதனை ஆலோசனை கூடுகை, விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன.

Story image

ஏற்பாடுகளை சேகரத்தலைவா் தாமஸ் ரவிக்குமாா், சபைத் தலைவா் கோல்கி வேதநாயகம், தலைவா் ஜெபராஜ், செயலா் இராஜசிங் ரூபன், பொருளாளா் ஜெபக்கனி, ஆலய நிா்வாக குழு உறுப்பினா்கள் ஐசக் சாமுவேல், தா்மராஜ், ரபீசன் பாக்கியராஜ், ஜெனோவின் சாம்ராட் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.