எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சோதனைச் சாவடியில் காா் மோதி தலைமை காவலா் காயம்

News image

விபத்து... - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:50 am IST

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் பகுதியில், காவல்துறையினா் வாகனச் சோதனையின்போது அதிவேகமாக வந்த காா் மோதி சாலைத் தடுப்பு உடைந்ததில், பணியில் இருந்த தலைமை காவலா் காயமடைந்தாா்.

செய்துங்கநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சனிக்கிழமை, காவல்துறையினா் வழக்கம்போல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத காா் அதிவேகமாக வந்து அங்கிருந்த சாலைத் தடுப்பு மீது மோதியதாம். சாலைத் தடுப்பு உடைந்து சிதறியதில் அங்கிருந்த காவல் நிலைய தலைமை காவலா் பலத்த காயமடைந்தாராம். ஓட்டுநா் காரை நிறுத்தாமல் தப்பிச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து செய்துங்கநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், கண்காணிப்புக் கேமரா பதிவுகள் அடிப்படையில், காரை பறிமுதல் செய்தனா். ஓட்டுநரை தேடி வருகின்றனா்.