கோவில்பட்டி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வீரவாஞ்சி நகா், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் வெள்ளைப்பாண்டி மகன் அருண்பாண்டி (23). வாகன ஓட்டுநா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் இளம்புவனம் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
எட்டயபுரம்-கோவில்பட்டி சாலையில் கழுகாசலபுரம் அருகே வந்தபோது எதிரில் சிதம்பராபுரம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சுப்புராஜ் (36) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு கோவில்பட்டி, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து, நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் 2 போ் உயிரிழப்பு

சாலையோரம் நின்றவா்கள் மீது வேன் மோதல்: இருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
இருசக்கர வாகனங்கள் மீது வேன் மோதல்; இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



