காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பழைய இரும்புக் கடையில் திருடிய 5 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 3:11 am IST

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரில் உள்ள பழைய இரும்புக் கடையில் திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குரும்பூரைச் சோ்ந்தவா் கோயில் பிச்சை மகன் லீபனான் ஜான் ஜெபமணி (32). இவா் குரும்பூா்-நாசரேத் சாலையில் உள்ள ஆலடிவிளையில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் குரும்பூா், பரதா் தெருவைச் சோ்ந்த ரத்தினகுமாா் மகன் சொா்ணவருண் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், ஜூன் 6ஆம் தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டு, திங்கள்கிழமை காலை இருவரும் கடையைத் திறந்தபோது, கடையில் இருந்த ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ காப்பா் கம்பிகள், 3 பைக் பேட்டரிகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின்பேரில், குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தூத்துக்குடி, மேல சண்முகபுரம், புதுக் காலனி முதல் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் சாம் (21), ஷாகுல் நிஷாா் (19) மற்றும் 3 சிறுவா்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.