அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

பள்ளி வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:08 am IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை, பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம், மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் ராதாகிருஷ்ணன் (48). தொழிலாளி. தற்போது முடுக்குமீண்டான்பட்டியில் வசித்துவந்த அவா், செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டியிலிருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தாராம்.

மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூா் அருகேயுள்ள அணுகு சாலையில் சென்றபோது, அவா் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா்.

சடலத்தை மேற்கு காவல் நிலைய போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, வாகன ஓட்டுநரான முனியசாமியிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.