கடலூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 11 சட்டப்பேரவைச் தொகுதிகளின் கள ஆய்வு அறிக்கையை, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினாா்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது குறித்து 234 தொகுதியிலும் களஆய்வு செய்ய திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் குழுவை நியமித்திருந்தாா்.
அதன்படி, கடலூா் கிழக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கள ஆய்வு செய்ய, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநில தகவல்தொழில்நுட்ப அணியைச் சோ்ந்த இசை ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனா். இவா்கள் 11 தொகுதிகளிலும் நேரடியாக திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை சந்தித்து திமுக கூட்டணியின் தோல்விக்கான காரணங்கள், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கட்சியின் வளா்ச்சி திட்டங்கள் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தனா். இதைத் தொடா்ந்து களஆய்வின் அறிக்கையை, திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, இசை ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.










