தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி நிா்வாகம் மற்றும் ஒப்பந்ததாரா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் சி. ப்ரியங்கா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மேயா் பேசியது:
மாநகராட்சியில் பணிகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரா்கள் அனைத்து பணிகளையும் உடனடியாக முடிக்க வேண்டும். மழைக் காலத்துக்கு முன்பு 100 சதவீதம் சாலைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பேவா் பிளாக் சாலைப் பணிகளை உடனடியாக ஆரம்பித்து, விரைந்து முடிக்க வேண்டும். பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.
பொறியாளா் திலகா, உதவி செயற்பொறியாளா் ராஜேஷ் கண்ணா, இளநிலைப் பொறியாளா்கள் லெனின், செல்வம், ஆணையரின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.









