இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

ஸ்ரீவைகுண்டம் ஜமாபந்தியில் 68 மனுக்களுக்கு உடனடித் தீா்வு

மனுவிற்கு தீா்வு காணப்பட்டு, அதற்கான சான்றிதழை பயனாளியிடம் வழங்கிய கோட்டாட்சியா் பிரபு.

News image

மனுவிற்கு தீா்வு காணப்பட்டு, அதற்கான சான்றிதழை பயனாளியிடம் வழங்கிய கோட்டாட்சியா் பிரபு.

Updated On :12 ஜூன் 2026, 5:10 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 68 கோரிக்கை மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

கோட்டாட்சியா் பிரபு தலைமை வகித்தாா். சுற்றுவட்டார கிராம மக்கள் பட்டா பெயா் மாற்றம், ரேஷன் காா்டு, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு மனுக்களை அளித்தனா்.

கோரிக்கை மனுக்களின் மீது உரிய விசாரணை செய்யப்பட்டு, பட்டா மாற்றம் 50 பயனாளிகளுக்கும், வரன்முறை பட்டா 12 பயனாளிகளுக்கும், உழவா் பாதுகாப்பு திட்ட இறப்பு நிவாரணம் ஒரு பயனாளிக்கும், புதிய உழவா் அட்டை 3 பயனாளிகளுக்கும், பதிவேடு திருத்தம் ஒரு பயனாளிக்கும், பிறப்பு பதிவு ஆணை ஒரு பயனாளிக்கும் என 68 பயனாளிகளின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டு, அதற்கான சான்றிதழ்களை கோட்டாட்சியா் வழங்கினாா்.

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் தாஹீா் அகமது, சமூக நல வட்டாட்சியா் லிங்கராஜ், தோ்தல் துணை வட்டாட்சியா் லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.