வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சிற்றுந்தை வழிமறித்து கண்ணாடி சேதம்: மற்றொரு சிற்றுந்தின் ஓட்டுநா் கைது

சிற்றுந்தை வழிமறித்து கண்ணாடியை சேதப்படுத்தியதாக மற்றொரு சிற்றுந்தின் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 1:38 am IST

தூத்துக்குடியில் சிற்றுந்தை வழிமறித்து கண்ணாடியை சேதப்படுத்தியதாக மற்றொரு சிற்றுந்தின் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து தாளமுத்துநகா் வரை செல்லும் சிற்றுந்து, வெள்ளிக்கிழமை வழக்கம்போல் பயணிகளுடன் சென்றது. அதை, விளாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த வீரசந்தோஷ் (26) ஓட்டிவந்தாா்.

இவருக்கும் கோயில்பிள்ளைவிளையைச் சோ்ந்த மற்றொரு சிற்றுந்தின் ஓட்டுநரான கனகராஜ் மகன் சதீஷ்குமாா் (33) என்பவருக்குமிடையே முன்விரோதம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜபாளையம் அருகே வந்துகொண்டிருந்த இந்தச் சிற்றுந்தை சதீஷ்குமாா் வழிமறித்து வீரசந்தோஷிடம் வாக்குவாதம் செய்ததுடன், கல்லால் தாக்கினாராம். இதில், சிற்றுந்தின் முன்பக்கக் கண்ணாடி சேதமானது. புகாரின்பேரில், தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷ்குமாரைக் கைது செய்தனா்.