சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணி: மேயா் ஆய்வு

குரூஸ்புரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி.

Published On :15 ஜூன் 2026, 1:56 am IST

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயா் ஜெகன்பெரியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடியில் பிரதான ஓடையான பக்கிள்ஓடை ரூ. 53 கோடி மதிப்பில் எப்சிஐ கிடங்கு முன்பிருந்து தொடங்கி திரேஸ்புரம் வரை 7 கி.மீ. தொலைவுக்கு 6 மீட்டரில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், குரூஸ்புரம் பகுதியில் நடைபெற்று வரும் இப்பணியை, மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வுசெய்தாா். அப்போது அவா் கூறியது:

தூத்துக்குடி மாநகர மக்களை மழை வெள்ள நேரத்தில் பாதுகாப்பதில் பக்கிள் ஓடை முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 2022- ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த மழை வெள்ளத்தில் மாநகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

பக்கிள் ஓடை இருந்ததால் பெரும்பாலான வெள்ளநீா் இந்த ஓடை வழியாக கடலுக்கு சென்றது. இதன்காரணமாக, அண்ணா நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, மில்லா்புரம் போன்ற பகுதிகள் பெரும் பாதிப்பில் இருந்து தப்பின. பல்வேறு ஆய்வுக்குப் பின்னா், தற்போது பக்கிள் ஓடை அகலப்படுத்தப்படுவதால், கூடுதலாக வெள்ளநீா் வந்தாலும், அவை வேகமாக வெளியேறிவிடும். இதனால், மழை வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். தற்போது நடைபெற்று வரும் பணிகளால் ஏற்கெனவே ஓடையில் தண்ணீா் செல்வதில் எந்தத் தடையும் இருக்காது என்றாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி உதவி பொறியாளா் ராஜேஷ்கண்ணா, பகுதிச் செயலா் சுரேஷ்குமாா், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.