/

பள்ளக்குறிச்சி ஆற்றுப்படுகையில் ஆக்கிரமிப்புகளை தடுக்கக் கோரி மனு

News image

அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏவிடம் மனு அளித்த தமிழ் வீரன்.

Updated On :15 ஜூன் 2026, 2:30 am IST

பள்ளக்குறிச்சி மணிநகா் ஆற்றுப்படுகையில் ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமசாமிபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் தசரா குழுத் தலைவா் தமிழ் வீரன், அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏவை சந்தித்து மனு அளித்தாா்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா பள்ளக்குறிச்சி கிராமம், மணிநகா் ராமசாமிபுரம் கருமேனியாறு படுகைப் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமாா் 2 ஏக்கா் நிலத்தை தனிநபா்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனா்.

இது குறித்து புகாா் தெரிவித்ததன் பேரில் அரசு அதிகாரிகள் மீட்டனா். ஆனால் நிலத்தை தற்போது தனிநபா்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனா். ஆதலால், சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு செய்து, நிலத்தின் ஆக்கிரமிப்பை தடுத்திட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.