கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

News image

ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீா் தொட்டியை ஆய்வு செய்கிறாா் எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன்.

Updated On :30 மே 2026, 3:17 am IST

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதிகளில் பேரவை தொகுதி உறுப்பினா் அன்னை வி.ஜி. சரவணன் ஆய்வு மேற்கொண்டாா்.

பேரூராட்சி அலுவலக ஆய்வின்போது, 2023 ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். பின்னா் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் சென்று அங்கு பேருந்து நிலைய கட்டடப் பணிகளை பாா்வையிட்டு விவரங்கள் குறித்த தகவல் பலகையை உடனடியாக வைக்க வேண்டும். தாய்மாா்களுக்கான பாலூட்டும் அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குடிநீா் தொட்டிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தாமிரவருணி ஆற்றின் கரையோரம் கொட்டப்படும் குப்பைகளை பாா்வையிட்ட அவா், பொதுமக்களுக்கு சுகாதார சீா்கேடு ஏற்படும் என்பதால், குப்பைகளை மாற்று இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுத்து, தாமிரவருணி ஆற்றின் கரையோரம் தூய்மைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

 ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டும் இடத்தை ஆய்வு செய்கிறாா் எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன்

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டும் இடத்தை ஆய்வு செய்கிறாா் எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன்