உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

சாயா்புரத்தில் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர எம்எல்ஏ உத்தரவு

சாயா்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ உத்தரவிட்டாா்.

News image

சாயா்புரம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன்.

Updated On :11 ஜூன் 2026, 4:42 am IST

சாயா்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ உத்தரவிட்டாா்.

சாயா்புரத்தில் டாக்டா் ஜி. யு. போப் பேருந்து நிலையத்தை கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 - 2023 இன் கீழ் புதியதாக ஒரு கோடியை 67 லட்சம் செலவில் கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

தற்போது வரை அந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டில் இல்லாமல் காட்சிப் பொருளாகவே காணப்படுகிறது. மேலும், இங்கு தனியாா் வாகனங்களை பலா் நிறுத்தி வைத்து உள்ளனா். மேலும் இங்கு உள்ள வணிக வளாகங்களில் கழிப்பறைகள் சேதமடைந்தும் காணப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ, இப்பேருந்து நிலையத்தை திடீரென ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பேரூராட்சி அதிகாரிகளிடம் இப்பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தினாா்.