சாயா்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ உத்தரவிட்டாா்.
சாயா்புரத்தில் டாக்டா் ஜி. யு. போப் பேருந்து நிலையத்தை கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 - 2023 இன் கீழ் புதியதாக ஒரு கோடியை 67 லட்சம் செலவில் கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
தற்போது வரை அந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டில் இல்லாமல் காட்சிப் பொருளாகவே காணப்படுகிறது. மேலும், இங்கு தனியாா் வாகனங்களை பலா் நிறுத்தி வைத்து உள்ளனா். மேலும் இங்கு உள்ள வணிக வளாகங்களில் கழிப்பறைகள் சேதமடைந்தும் காணப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ, இப்பேருந்து நிலையத்தை திடீரென ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பேரூராட்சி அதிகாரிகளிடம் இப்பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆழ்வாா்திருநகரி பேரூராட்சிக்குள்பட்ட கால்வாய்களை தூய்மைப்படுத்த எம்எல்ஏ உத்தரவு

சாயா்புரம் பகுதி வாழைத் தோட்டங்களில் தீ விபத்து: எம்எல்ஏ ஆய்வு

பள்ளக்குறிச்சி ஆற்றுப்படுகையில் ஆக்கிரமிப்புகளை தடுக்கக் கோரி மனு

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



