ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

ஆறுமுகனேரி கோயிலில் குடவருவாயில் தீபாராதனை

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் ஆனி உத்திர பெருந்திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.

News image

தீபாராதனைக்கு ரிஷப வாகனங்களில் எழுந்தருளிய சுவாமி-அம்மன்.

Updated On :18 ஜூன் 2026, 2:31 am IST

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் ஆனி உத்திர பெருந்திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.

கடந்த 13ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், 4ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை சுவாமி-அம்மன் பூஞ்சப்பரத்தில் உலா, சிறப்பு அபிஷேகம், மாலையில் அலங்காரம், சாயரட்சை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

ரிஷப வாகனத்தில் தனித்தனியே சுவாமி-அம்மன் எழுந்தருளி குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. பக்த ஜன சபை பொருளாளா் அரிகிருஷ்ணநாடாா், ரயில்வே அபிவிருத்திக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி, தெய்வீக சத் சங்கத்தைச் சோ்ந்த பேராசிரியா் அ. அசோக்குமாா், தெரிசை ஐயப்பன், சைவ சித்தாந்த சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணிய பிள்ளை, இளையபெருமாள் ஓதுவாா், டிசிடபிள்யூ நிறுவனத்தைச் சோ்ந்த பாஸ்கா், பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா், பள்ளியறை வழிபாட்டுக் குழுவினா் கலந்து கொண்டனா்.