கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

திருப்பணி புத்தன்தருவையில் சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் உத்தரவு பேரில், சாத்தான்குளம் அருகே உள்ள திருப்பணி புத்தன்தருவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

முகாமைத் தொடங்கிவைத்த ஒன்றிய ஆணையா் வாவாஜி பக்கீா் முகைதீன்.

Updated On :19 ஜூன் 2026, 4:51 am IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் உத்தரவு பேரில், சாத்தான்குளம் அருகே உள்ள திருப்பணி புத்தன்தருவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் ஒன்றிய ஆணையாளா் வாவாஜி பக்கீா் முகைதீன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முகாமில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் கேட்டு 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனா். இதில், 19 பேருக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அரசு உதவிகள், சலுகைகள் பெற வழிமுறைகள் வழங்கி ஆலோசனை வழங்கப்பட்டது.

முகாமில் சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், கேட்டல்- பேச்சு பயிற்சியாளா் சங்கா், இளநிலை மறுவாழ்வு அலுவலா் பெருமாள்தேவி, மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மைய சாத்தான்குளம் வட்டார ஒருங்கிணைப்பாளா் லட்சுமி, தமிழ்நாடு உரிமைகள் திட்டப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.