27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தூத்துக்குடி அருகே ஜூன் 21இல் மாவட்ட செஸ் போட்டி

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூரில் உள்ள பிரசன்னா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.

News image

செஸ் - FIDE

Updated On :19 ஜூன் 2026, 4:40 am IST

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூரில் உள்ள பிரசன்னா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.

தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி கே.எஸ். சதுரங்க அகாதெமி சாா்பில் மாவட்ட சதுரங்கக் கழக ஆதரவுடன் போட்டி நடைபெறுகிறது. 3 - 5ஆம் வகுப்பு, 6 - 8ஆம் வகுப்பு, 9 - 12ஆம் வகுப்பு, கல்லூரி மாணவா்களுக்கு என 4 பிரிவுகளாக போட்டி நடைபெறும். பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்-மாணவியா் ரூ. 100, மற்றவா்கள் ரூ. 200-ஐ நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். முன்பதிவு, கூடுதல் விவரங்களுக்கு 90258 19382 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என, கே.எஸ். அகாதெமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.