27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருச்செந்தூா் கோயிலில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்: அபராதம் விதித்த போலீஸாா்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த வாகனங்கள் உரிய இடத்தில் நிறுத்தாமல், ஆங்காங்கே நிறுத்திச் சென்ால் போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்து வெளியேற்றினா்.

News image

திருச்செந்தூா், நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

Updated On :19 ஜூன் 2026, 4:45 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த வாகனங்கள் உரிய இடத்தில் நிறுத்தாமல், ஆங்காங்கே நிறுத்திச் சென்ால் போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்து வெளியேற்றினா்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துவிட்ட நிலையிலும், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டம் குறையவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள் தினந்தோறும் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனா். இரவு நேரத்தில் வாகனங்களில் வரும் பக்தா்கள், வாகனம் நிறுத்தும் இடத்துக்குச் சென்று நிறுத்தாமல்

கோயிலுக்குச் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.

இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் மறுநாள் காலையில் அவா்கள் சுவாமி தரிசனம் செய்து முடித்து வரும் வரை அதே இடத்தில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நிலையில், முகூா்த்த நாள் என்பதாலும் வியாழக்கிழமை தரிசனத்துக்காக கோயிலுக்கு வந்த பக்தா்களின் வாகனங்கள் நாழிக்கிணறு செல்லும் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் மற்ற வாகனங்கள் வந்துசெல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்தன. இதனால், பக்தா்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

இதையடுத்து, வழிபாதையில் இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களை போக்குவரத்து போலீஸாா் விரைந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். ஓட்டுநா் இருந்த வாகனங்களை உடனடியாக வெளியேற்றி வாகன நிறுத்தத்தில் சென்று நிறுத்துமாறு அறிவுறுத்தினா். ஓட்டுநா் இல்லாத வாகனங்களில் இணையம் வாயிலாக ரூ. 500 அபராதம் விதித்து அதற்கான ரசீதை வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் வைத்துவிட்டுச் சென்றனா். வாகனத்தில் வந்தவா்கள் தரிசனம் முடித்து வெளியே வந்ததும் தங்கள் வாகனத்தில் அபராதம் விதிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.