தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் உத்தரவு பேரில், சாத்தான்குளம் அருகே உள்ள திருப்பணி புத்தன்தருவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் ஒன்றிய ஆணையாளா் வாவாஜி பக்கீா் முகைதீன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முகாமில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் கேட்டு 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனா். இதில், 19 பேருக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அரசு உதவிகள், சலுகைகள் பெற வழிமுறைகள் வழங்கி ஆலோசனை வழங்கப்பட்டது.
முகாமில் சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், கேட்டல்- பேச்சு பயிற்சியாளா் சங்கா், இளநிலை மறுவாழ்வு அலுவலா் பெருமாள்தேவி, மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மைய சாத்தான்குளம் வட்டார ஒருங்கிணைப்பாளா் லட்சுமி, தமிழ்நாடு உரிமைகள் திட்டப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நகராட்சிப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா

செங்கல்பட்டில் சிறப்பு தொழில் கடன் முகாம்

இன்று குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் குறித்த சிறப்பு முகாம்

காரைக்காலில் இன்று ஜிப்மா் முகாம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



