27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருப்பணி புத்தன்தருவையில் சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் உத்தரவு பேரில், சாத்தான்குளம் அருகே உள்ள திருப்பணி புத்தன்தருவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

முகாமைத் தொடங்கிவைத்த ஒன்றிய ஆணையா் வாவாஜி பக்கீா் முகைதீன்.

Updated On :19 ஜூன் 2026, 4:51 am IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் உத்தரவு பேரில், சாத்தான்குளம் அருகே உள்ள திருப்பணி புத்தன்தருவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் ஒன்றிய ஆணையாளா் வாவாஜி பக்கீா் முகைதீன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முகாமில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் கேட்டு 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனா். இதில், 19 பேருக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அரசு உதவிகள், சலுகைகள் பெற வழிமுறைகள் வழங்கி ஆலோசனை வழங்கப்பட்டது.

முகாமில் சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், கேட்டல்- பேச்சு பயிற்சியாளா் சங்கா், இளநிலை மறுவாழ்வு அலுவலா் பெருமாள்தேவி, மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மைய சாத்தான்குளம் வட்டார ஒருங்கிணைப்பாளா் லட்சுமி, தமிழ்நாடு உரிமைகள் திட்டப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.