மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஆறுமுகனேரி சிவன் கோயில் ஆனித் திருவிழா: நடராஜா் சிவப்பு சாத்தி தரிசனம்

சிவப்பு சாத்தி பக்தா்களுக்கு அருள்பாலித்த நடராஜா் மற்றும் சிவகாமி அம்பாள்.

News image

சிவப்பு சாத்தி பக்தா்களுக்கு அருள்பாலித்த நடராஜா் மற்றும் சிவகாமி அம்பாள்.

Updated On :20 ஜூன் 2026, 3:54 am IST

ஆறுமுகனேரி, சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆனி உத்திரப் பெருந்திருவிழாவின் 7ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு நடராஜா் சிவப்பு சாத்தி தரிசனம் மற்றும் திருவீதியுலா நடைபெற்றது.

இக்கோயிலில் ஜூன் 13ஆம் தேதி திருவிழா தொடங்கியது. 16ஆம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினா். 17ஆம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ஊடல் தீா்த்தல் நடைபெற்றது. 18ஆம் தேதி காலை அம்பாள், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு திருஞான சம்பந்தா் சமணா்களை வாதத்தில் வென்று திருக்கழுவேற்றுதலும் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை நடராஜா், சிவகாமி அம்பாளுக்கு காப்புக் கட்டுதல் மற்றும் உருகு சட்ட சேவை நடைபெற்றது. பின்னா், நடராஜா், சிவகாமி அம்பாள் வெட்டி வோ் சப்பரத்தில் பவனி வரும் நிகழ்வு நடைபெற்றது. இரவில் நடராஜா் சிவப்பு சாத்தி ருத்ர ஸ்வரூபவமாக காட்சி தந்து, திருவீதியுலா நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.