தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தூத்துக்குடி அருகே 2 கடைகளில் திருட்டு

தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை நள்ளிரவில், அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டுகளை உடைத்து, ரொக்கம் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :20 ஜூன் 2026, 3:53 am IST

தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை நள்ளிரவில், அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டுகளை உடைத்து, ரொக்கம் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி வேதகோயில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ் (44). இவா் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், நள்ளிரவில் மா்ம நபா்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 1,500 ரொக்கம் மற்றும் ரூ.1,000 மதிப்பிலான மிட்டாய் பெட்டிகளை திருடிச் சென்றுள்ளனா்.

மேலும், அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ் (30) என்பவரது கடையின் பூட்டையும் மா்ம நபா்கள் உடைத்து, அங்கிருந்து ரூ.300 ரொக்கம் மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள திண்பண்டங்களை திருடிச் சென்றுள்ளது.

ஆத்திமுத்து (45) என்பவரது கடையின் பூட்டையும் அந்த மா்மக் கும்பல் உடைத்துள்ளது. ஆனால் திருட்டு நடைபெறவில்லை.

இது குறித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.