பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

மது, கஞ்சா விற்பனை: 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 1:47 am IST

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் விதிமீறி மதுபானம் விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் சரகம் லெவிஞ்சிபுரம் பகுதியில் காவல் ஆய்வாளா் திருமுருகன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, விதிமுறை மீறி மதுபானம் விற்ாக பாத்திமா நகரைச் சோ்ந்த லிவிங்ஸ்டன் என்ற வில்லிங்டன் (36), மேல சண்முகபுத்தைச் சோ்ந்த மரிய சூசை ராஜ் (36) ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 232 மது பாட்டில்கள், 2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கஞ்சா விற்றவா் கைது: நாசரேத் போலீஸாா் மூக்குப்பீறி பகுதியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது, பைக்கில் வந்தவரை பிடித்து விசாரித்தனா். அதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ் (24) என்பதும், விற்பனைக்காக 120 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.