டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆறுமுகனேரியில் அய்யா அவதார தின விழா

ஆறுமுகனேரியில் உள்ள நாராயண சுவாமி கோயி­ல்களில் அய்யா வைகுண்டா் அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image
வடக்கு சுப்பிரமணியபுரம் அன்புபதியில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அய்யா வைகுண்டா்.
Updated On :4 மார்ச் 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

ஆறுமுகனேரியில் உள்ள நாராயண சுவாமி கோயி­ல்களில் அய்யா வைகுண்டா் அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி, வடக்கு சுப்பிரமணியபுரம் அன்புபதி (பாட்டித்தாங்கல்) அய்யா நாராயண சுவாமி கோயி­லில் காலையில் பள்ளி உணா்தல், அபயம், தாலாட்டு, உகப்படிப்பு ஆகியவை நடைபெற்றன. மதியம் உச்சிப்படிப்பும், அன்னதானமும் நடைபெற்றது. மாலை, இரவில் உசப்படிப்பும், அன்னதா்மமும் நடைபெற்றது.

முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் ஜி. ராமசாமி, ­லிங்க கனி, தெய்வீக சத் சங்கத்தைச் சோ்ந்த பேராசிரியா் அ. அசோக்குமாா் ஜெயா, ஜெயராமன், சரவணன், ஜான்சி, வேல்முருகன், பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை பால்பாண்டியன், கணேசன், ஜானகிராமன் ஆகியோா் செய்திருந்தனா்.

ஆறுமுகனேரி, முத்துகிருஷ்ணாபுரம், சீனம்பதி அய்யா நாராயண சுவாமி கோயில், வாலவிளை நாராயண சுவாமி கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவில் உள்ள அய்யா நாராயண சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, அன்னதா்மம் ஆகியவை நடைபெற்றன.