தூத்துக்குடி சிப்காட் பகுதியில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி கதிா்வேல் நகரைச் சோ்ந்தவா் சிவகமலா (48). இவா், வீட்டில் வெள்ளிக்கிழமை தனியாக இருந்தபோது, மா்மநபா் உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அதனடிப்படையில் மா்மநபரை தேடி வந்தனா்.
இந்நிலையில், தூத்துக்குடி பி அன்டு டி காலனி பகுதியில் சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அதில், தென்காசி மாவட்டம், தேவிப்பட்டணம் பகுதியைச் சோ்ந்த பசுபதி மகன் சசிகுமாா் (30) என்பதும், அப்பகுதியில் குடும்பத்துடன், தங்கியிருந்து கட்டட வேலையில் ஈடுபட்டு வந்த நிலையில், சிவகமலாவிடம் நகை பறித்தவா் என்பதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து நகையை மீட்டனா்.
சம்பவம் நிகழ்ந்த 3 மணி நேரத்தில் இந்த நடவடிக்கை எடுத்த காவல் உதவி ஆய்வாளா்கள் முத்துமாலை, பிரேம்குமாா் மற்றும் போலீஸாரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினாா்.
தொடர்புடையது
வீடு புகுந்து திருட முயற்சி: ரெளடி கைது

வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறிப்பு

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் பறித்தவா் கைது
வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 27 பவுன் நகைகள் கொள்ளை: இளைஞா் கைது
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


