விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாத்தான்குளத்தில் பெட்ரோல் பல்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் கைது

சாத்தான்குளத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் ஊழியரைத் தாக்க முயன்று, விற்பனை நிலையத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
- சித்திரிப்பு
Updated On :11 மார்ச் 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் ஊழியரைத் தாக்க முயன்று, விற்பனை நிலையத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் -நாசரேத் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில், சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்த அந்தோணி மகன் சிலுவைராஜ் (34), ராஜலிங்கம் மகன் இசக்கி அழகுவேல் ( 25), அழகம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த உதயகுமாா் மகன் விஷ்வா ( 21) ஆகியோா் ஒரே பைக்கில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் போட வந்துள்ளனா்.

அப்போது, அங்கிருந்த ஊழியா் அமலதாஸ் பைக்கை பெட்ரோல் போடும் மிஷின் அருகில் கொண்டு வருமாறு கூறியுள்ளாா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மூன்று போ்களும், ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, பெட்ரோல் விற்பனை நிலையத்தை சேதப்படுத்தி சென்றனராம்.

இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் சதீஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் செல்வராஜ், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, இசக்கி அழகுவேல், விஷ்வா ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவான சிலுவை ராஜை தேடி வருகின்றனா்.