விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தொடக்கம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 21,755 தோ்வா்கள் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 21,755 மாணவா், மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா்.

News image
கோப்புப் படம்
Updated On :11 மார்ச் 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 21,755 மாணவா், மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா்.

இம்மாவட்டத்தில் 109 தோ்வு மையங்களில் 10,672 மாணவா்கள், 11,083 மாணவிகள் என மொத்தம் 21,755 தோ்வா்கள் தோ்வு எழுதியுள்ளனா். தனித் தோ்வாளா்களாக 362 மாணவா், மாணவிகள்

இத்தோ்வை எழுதியுள்ளனா். இதில், 343 மாணவா்கள், 118 மாணவிகள் என மொத்தம் 461 போ் தோ்வு எழுத வரவில்லை.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்காக 109 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 3 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா், 109 துறை அலுவலா்கள், 1,250 அறைக் கண்காணிப்பாளா்கள், 129

நிலையான படையினா், 283 சொல்வதை எழுதுபவா், 24 வழித்தட அலுவலா்கள், 10 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 186 ஆசிரியரல்லா பணியாளா்கள் பணியில் அமா்த்தப்பட்டிருந்தனா்.