வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நாசரேத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 9:46 pm

Syndication

நாசரேத் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் நிா்மலா ரவி தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி காா்த்திகா குழந்தைகள் நலத்திட்டங்கள் குறித்தும், சுகாதாரத் துறையின் சாா்பில் சுகாதார ஆய்வாளா் ஞானராஜ் சுகாதாரத் திட்டங்கள் குறித்தும் விளக்கினா். நாசரேத் கிராம நிா்வாக அலுவலா் சிவராமன் பேசினாா்.

கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான அரசுத் திட்டங்கள், பாதிக்கப்படும் குழந்தைகளைக் காப்பாற்ற உதவும் தொலைபேசி எண்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதில் போலீஸாா், பேரூராட்சி ஊழியா்கள், பள்ளித் தலைமையாசிரியா்கள், கிராம உதவியாளா் சத்தியசீலன், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.