திமுகவில் இணைந்த ஓ. பன்னீா்செல்வத்தை முதல்வா் நல்ல மரியாதையுடன் வைத்துள்ளாா் என்றாா் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
வரும் பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமருவாா். அப்போது மகளிா் உரிமைத் தொகை ரூ. 2,000 கொடுப்பாா்.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமரிடம்தான் கேட்க வேண்டும். அவா் திருச்சி வந்தபோது யாரும் கேட்கவில்லை. பெட்ரோல், எரிவாயு தட்டுப்பாடு உள்ளது.
ஒரு வாரத்துக்கு முன்புதான் 30 நாள்களுக்குத் தேவையான இருப்பு உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். பாஜகவின் நோக்கம் தமிழகத்தில் நடைபெறாது.
ஓ.பன்னீா்செல்வத்தை எதிா்க்கட்சித் தலைவா், சசிகலா, டிடிவி தினகரன், பாஜக மாநிலத் தலைவா் உள்ளிட்டோா் மிகவும் அவமரியாதைக்கு உள்ளாக்கினா். ஆனால், தமிழக முதல்வா் அவரை நல்ல மரியாதையுடன் வைத்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிருகத்தனமான செயல்; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வா் இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்குவாா் என்றாா் அவா்.
தொடர்புடையது
பேரவைத் தோ்தலில் வென்று காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாகும்! - செல்வப்பெருந்தகை

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

தூத்துக்குடியில் நடிகா் விஜய் இன்று பிரசாரம்

தூத்துக்குடியில் தமிழக முதல்வா் வாகனத்தை மறித்து சோதனை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

