தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கோவில்பட்டி பகுதியில் போலீஸாா் வாகன சோதனை

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 6:50 pm

கோவில்பட்டி பகுதியில் துணை ராணுவப் படையினருடன் காவல் துறையினா் இணைந்து ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையொட்டி, கடந்த 4 நாள்களுக்கு முன்பே துணை ராணுவப் படையினா் கோவில்பட்டி தொகுதிக்கு ரயிலில் வந்தனா். அவா்கள் காவல் துறையினருடன் இணைந்து வாகன சோதனை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, வாகனங்களில் பணம், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டுசெல்லப்படுவதைத் தடுக்கும் வகையில், கோவில்பட்டி எட்டயபுரம் சாலை, பல்லக்கு சாலை, இனாம் மணியாச்சி விலக்கு, தோட்டிலோவன்பட்டி விலக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.