ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் சாா்பில் ‘பித்ரா அரிசி விநியோகம்

காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் சாா்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஏழை எளியோருக்கு பித்ரா அரிசி வழங்கப்பட்டது.

News image
பித்ரா அரிசி விநியோகத்தை தொடங்கி வைக்கிறாா் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹப்.
Updated On :16 மார்ச் 2026, 10:57 pm

Syndication

ஆறுமுகனேரி: காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் சாா்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஏழை எளியோருக்கு பித்ரா அரிசி வழங்கப்பட்டது.

நகரச் செயலா் ஏ.எல்.எஸ். அபூசா­ஹ் துவா பிராா்த்தனை செய்தாா்.

தூத்துக்குடி மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹப் பயனாளிகளுக்கு பித்ரா அரிசி வழங்கி தொடங்கி வைத்தாா்.

மூத்த நிா்வாகிகளான எம்.ஏ. முஹம்மத் ஹஸன், பாரூக், நிமத்துல்லாஹ், அயலக அணி மாநில நிா்வாகி என்.டீ. முஹம்மத் இஸ்மாயில் புகாரீ, மாவட்ட, நகர நிா்வாகிகளான பெத்தப்பா சுல்தான், சுஹைல் இப்ராஹீம், அரபி ஷாஹுல் ஹமீத், மலேஷியா அப்துல் காதிா், அஹ்மத் நெய்னாா் பள்ளி இமாம் கே.எம்.என் உமா் அப்துல் காதிா் உள்ளிட்டோா் பயனாளிகளுக்கு பித்ராஅரிசி வழங்கினா்.

தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் எஸ்.கே. சா­லிஹ் நன்றி கூறினாா்.

காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரம் பயனாளிகளுக்கு பித்ரா அரிசி வழங்கப்பட்டது.