தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் தீயில் எரிந்து சேதம்

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள மின்மாற்றி தீப்பிடித்து எரிந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் தீயில்

News image
நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்.- கோப்புப்படம்
Updated On :16 மார்ச் 2026, 10:30 pm

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள மின்மாற்றி தீப்பிடித்து எரிந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் தீயில் முற்றிலும் எரிந்து சேதமானது.

தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில், புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.

இந்த கடையில் பணிபுரியும் பணியாளா் ஒருவா் அவரது இருசக்கர வாகனத்தை ஷோரூம் அருகே நிறுத்தியிருந்தாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலையில், அப்பகுதியில் உள்ள மின்மாற்றி வெடித்து சிதறியதில் எழுந்த தீப்பொறி, அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் விழுந்து, வாகனம் தீப்பற்றி எரிந்தது.

கவலறிந்து வந்த தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலா் கருணாகரன், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் கோமதி அமுதா மற்றும் தீயணைப்புப் படையினா், தண்ணீா் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது.