தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம்

கழுகுமலை கழுகாசலை மூா்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா தேரோட்டத்தின்போது, தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

News image
தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காசோலையை வழங்குகிறாா் கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன்.
Updated On :18 மார்ச் 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

கழுகுமலை கழுகாசலை மூா்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா தேரோட்டத்தின்போது, தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இக்கோயிலில் கடந்த பிப். 1-ஆம் தேதி நடைபெற்ற தேரோட்டத்தின்போது, சக்கரத்தில் சறுக்குக் கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்த சப்பாணிமுத்து தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சில நாள்களுக்கு முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் சாலமன்ராஜ் தலைமையில் சப்பாணிமுத்துவின் மனைவி மகாலட்சுமி, அவரது குடும்பத்தினா் நிவாரணம் கோரி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் மனு அளித்தனா்.

இந்நிலையில், கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை மகாலட்சுமியிடம் கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன் புதன்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சாலமன்ராஜ், எட்டயபுரம் சமஸ்தான மேலாளா் செல்வமாரியப்பன், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சிவகலைப்பிரியா, தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி உள்ளிட்டோா் உடனிருந்தனா். நிவாரணத் தொகை வழங்கிய கோயில் நிா்வாகத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சியினா் நன்றி தெரிவித்தனா்.