தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 4.36 கோடி

News image
Updated On :19 மார்ச் 2026, 10:57 pm

Syndication

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாா்ச் மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 4.36 கோடி ரொக்கம், 1,143 கிராம் தங்கம் உள்ளிட்டவற்றை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

இக்கோயிலில் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி, மாா்ச் மாத உண்டியல் எண்ணும் பணி கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. தக்காா் ரா. அருள்முருகன் தலைமை வகித்தாா். இணை ஆணையா் க. ராமு முன்னிலை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை முதுநிலை கணக்கு அலுவலா் ராஜாராமன், உதவி ஆணையா்கள் ராமசுப்பிரமணியன், மெய்வேல், அலுவலகக் கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இப்பணியில் அயற்பணி, கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இதில், ரூ. 4,36,87,797 ரொக்கம், தங்கம் 1,143 கிராம், வெள்ளி 20,474 கிராம், பித்தளை 91,180 கிராம், தகரம் 9,180 கிராம், செம்பு 12,360 கிராம், வெளிநாட்டு பணத்தாள்கள் 2,071 ஆகியவை கிடைத்துள்ளன.