வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கோவில்பட்டியில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி வட்டார தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:56 pm

கோவில்பட்டி வட்டார தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டுள்ள முக்கூட்டு மலை, நக்கல முத்தன்பட்டி, வடக்குப்பட்டி, புளியங்குளம், பிச்சைத்தலைவன்பட்டி, அய்யனேரி, அப்பனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையாா் நத்தம், வெங்கடாசலபுரம், இளையரசனேந்தல், ஜமீன் தேவா்குளம் ஆகிய கிராம ஊராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்து ஆணை வழங்க வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி வட்டாரத் தலைவா் மணிமொழி நங்கை தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஸ்ரீதரன், கோவில்பட்டி கல்வி மாவட்டச் செயலா் புனித அந்தோணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரச் செயலா் கருப்பசாமி கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

மாவட்டத் தலைவா் செல்வராஜ், வட்டாரப் பொருளாளா் குணசீலன் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.