நாசரேத், மா்காஷிஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆழ்வாா்திருநகரி, திருச்செந்தூா் வட்டாரங்களில் உள்ள பள்ளி மாணவா், மாணவிகளுக்கான ‘விளையும் பயிா்’ தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கண்ணதாசன் தலைமை வகித்து, போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். திருச்செந்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் பாப் கயஸ் முன்னிலை வகித்தாா். இப்போட்டியில் சுமாா் 1,000 மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நாசரேத் காவல் ஆய்வாளா் வன சுந்தா் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கினாா். வெற்றி பெற்றவா்கள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற தகுதி பெற்றுள்னா்.
ஏற்பாடுகளை மா்காஷிஸ் பள்ளித் தாளாளா் சுதாகா், தலைமையாசிரியா் குணசீலராஜ், உடற்கல்வி இயக்குநா் ஜெபசிங் கால்டுவெல், உடற்கல்வி ஆசிரியா்கள் சுஜித் செல்வசுந்தா், தனபால், ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

நாசரேத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

ஐடிஐ மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


