தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதி ஸ்டேட் பாங்க் காலனி சாலையில் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.13.30 லட்சத்தை பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஓட்டப்பிடாரம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காமாட்சி தலைமையிலான பறக்கும் படையினா், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி சாலையில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, தனியாா் ஏடிஎம்மில் நிரப்புவதற்காக உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.13.30 லட்சத்தை அவா்கள் பறிமுதல் செய்து, பின்னா் அந்தப் பணத்தை தூத்துக்குடி துணை வட்டாட்சியா் பாலமுருகனிடம் ஒப்படைத்தனா்.
ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு: இதனிடையே, திருச்செந்தூா் ரவுண்டானா, சிதம்பரநகா் சக்தி விநாயகா் பள்ளி, டூவிபுரம் பெல் மெட்ரிக் பள்ளி உள்ளிட்டவற்றின் அருகே பறக்கும் படை குழுவினா் நடத்திய வாகனச் சோதனையை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.மதன் உடனிருந்தாா்.
தொடர்புடையது

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

வாகனச் சோதனை: ரூ. 2.54 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


