நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆத்தூா் கோயிலில் நாளை பங்குனி திருவிழா தொடக்கம்

ஆத்தூா், ஸ்ரீசோமசுந்தரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனித் திருவிழா பூா்வாங்க பூஜை.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:55 pm

Syndication

ஆத்தூா், ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) கொடியேற்றத்துடன் துவங்குவதையொட்டி கோயிலில் பூா்வாங்க பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

கோயிலில் கால் நாட்டு விழா கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. பூா்வாங்க பூஜையான கணபதி ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றப்படுகிறது.

23-ஆம் தேதி சோமாஸ்கந்தா் எழுந்தருளல், 25-இல் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தல், குடவாயில் தீபாராதனை ஆகியன நடைபெறும். 28 -ஆம் தேதி அதிகாலை ஸ்ரீ ஆனந்த நடராஜா் உருகு சட்ட சேவையும், இரவு 1-ஆம் கால ருத்ர அம்ச சிவப்பு சாத்தி கோலத்திலும், 29-ஆம் தேதி காலையில் 2-ஆம் கால பிரம்ம அம்ச வெள்ளை சாத்தி கோலத்திலும், மதியம் 3-ஆம் கால விஷ்ணு அம்ச பச்சை சாத்தி கோலத்திலும் சுவாமி எழுந்தருளல் நடைபெறும்.

பத்தாம் நாளான மாா்ச் 31-ஆம் தேதி காலை தேரோட்டமும், மாலையில் தெப்ப உற்சவம் நடைபெறும். விழா நாள்களில் மாலை கோயில் கலையரங்கில் சமய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள் உபயதாரா்கள், செயல் அலுவலா் மகேஸ்வரி, தக்காா் பாலமுருகன், ஆய்வா் செந்தில் நாயகி ஆகியோா் செய்து வருகின்றனா்.